bo-yang
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from bo-yang, Health/Beauty, 85 sea Street, Colombo.
17/05/2026
*வீட்டிலேயே இருக்கு அவசரத்திற்கு உதவும் கை மருந்துகள்* .....!
முதுகு வலி, மூட்டு வலி, இதய நோய் உள்ளவர்கள் தினமும் இரவு படுக்கைக்கு போகும் முன்பு பாலில் மூன்று வெள்ளைப் பூண்டு பல்லை போட்டு காய்ச்சி குடித்து வந்தால் வலிகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
உடலில் அதிகப்படியான உஷ்ணம் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் இருக்க மாட்டார்கள். இவர்களின் சருமம் கூட பளபளப்பாக இருக்காது. வெங்காயம் மற்றும் தேன் முடிந்த வரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தலை முதல் கால் வரை நல்லெண்ணெய்யைத் தேய்த்து குளிப்பதால் உடலில் இருந்து தேவையற்ற சூடு நீங்கி விடும்.
ஓயாத பல் வலி இருந்தால் சுக்கு துண்டு ஒன்றை தூள் செய்து அதனுடன் கிராம்பையும் சேர்த்து மென்று விழுங்கினால் பல் வலியிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இரத்தம் சுத்தம் செய்ய குங்குமப்பூ ஐந்து, கொஞ்சம் குல்கந்தை எடுத்து பொடித்து தேனுடன் கலந்து சாப்பிட நல்ல பலனைத் தரும்.
தினமும் இரவில் பாலுடன் சிறிதளவு கடுக்காய் பொடியைக் கலந்து குடிக்கவும். இது எல்லாவிதமான இதய நோயையும் தடுத்து நிறுத்தும். மாரடைப்பு வராமல் தடுக்கும், இதயம் வலுவடையும்.
சிவப்புக் கரும்பு சாறு 10 அவுன்சுடன் 1 அவுன்ஸ் தேனை கலந்து வாரம் இருமுறை சாப்பிட வேண்டும். அதோடு சுத்தம் செய்த தூதுவளை கீரையின் பூக்களை எடுத்து பாலுடன் கலந்து கொதிக்க வைத்து படுக்கப் போவதற்கு முன் குடிக்க ஆஸ்துமாவின் தீவிரம் குறையும்.
காய்ச்சிய பாலுடன் சிறிது கசகசா பொடியைக் கலந்து தூங்கச் செல்வதற்கு முன் குடிக்க, நல்ல தூக்கத்தையும், உடல் நலத்தையும் கொடுக்கும்.
பாலுடன் பனங்கற்கண்டு, மிளகு, மஞ்சள் பொடி சேர்த்துக் குடித்தால் தொண்டைப்புண் குணமாகும். மூலநோய் தவிர்க்கப்படும்.
ஒரு துளி வெங்காயச் சாற்றினை இரண்டு நாசித் துவாரங்களிலும் இட்டுப் பாருங்கள். மூக்கடைப்பு உடனே குணமாகும்.
கருஞ்சீரகத்தில் ஒரு தேக்கரண்டி அளவு மெல்லிய துணியில் பொட்டலமாகக் கட்டி வைத்துக் கொள்ளுங்கள். இன்ஹேலரைப் பயன்படுத்துவது போல அடிக்கடி முகர்ந்து பாருங்கள் மூக்கடைப்பு குணமாகும்.
100 கிராம் கருஞ்சீரகத்தை வறுத்து பொடி செய்து 200 கிராம் தேனில் குழைத்து வைத்துக்கொண்டு. தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர தொண்டைக் கமறல் குணமாகும்.
*பெண்களுக்கு*
அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி, மூக்கிணாங்கிழங்கு, இந்துப்பையும் எடுத்து ஒரு லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து அதை 150 மில்லியாக வற்ற வைத்து மாதவிடாய் ஏற்படும் முதல் மூன்று நாட்கள் தினமும் இந்த நீரை வடிகட்டி சாப்பிட்டு வர மலட்டுத்தன்மை நீங்கிவிடும்.
வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட கக்குவான் இருமல் குணமாகும்.
தெரிந்தோ, தெரியாமலோ காயம் ஏற்பட்டு இரத்தப் பெருக்கு நிற்காமல் இருந்தால் கருவேலம் பிசின் தூளைக் காயத்தின் மீது தூவி விட்டால் இரத்த பெருக்கு உடனே நின்று விடும்.
வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி செம்பருத்தி பூவின் 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.
Whatsapp +94773466837
17/05/2026
*சர்க்கரை நோயை குணப்படுத்த முடியுமா?*
*நிச்சயமாக அதற்குண்டான அரு மருந்து நம்மிடமே உள்ளது. அது என்ன?*
🔵 சக்கரை நோய்க்குக் காரணம் *இன்சுலின் ஒழுங்காகச் சுரக்காதது தான்;*
ஆனால், இயற்கையாகச் சுரக்க ஒரே மருந்து எது?
🔵 *உமிழ்நீர் தான்.*
சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு என்பதைப் பார்ப்ப்போம்.
🔵 *உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான்,*
கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் *இயற்கை மருந்து.*
🔵 உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர்.
வாழ்வதற்காக உண்டனர்.
அதனால்தான் பொறுமையுடனும்
அமைதியுடனும்
பொறுப்புடனும் உணவருந்தினர்.
அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது.
கூடுதல் உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதற்காக *ஊறுகாயைச்* சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.
🔵 அதேபோல் உணவு உண்பதற்கு
30 நிமிடம் முன்னதாகவும்
உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும்
நாம் 🔵 *கடலைமிட்டாய் , வெல்லம் , பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி* இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் கட்டாயம் *உமிழ்நீர் நன்கு சுரக்கும்.*
நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.
🔵 தூண்டல், துலங்கல் என்ற விதியின் படி *உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல்* சுரக்கப்படுகிறது.
நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.
உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது.
வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி,
சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.
🔵 உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல்,
அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்.
🔵 நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.
உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சக்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்.
🔵 நாளடைவில் அது *சக்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக* மாறிவிடுகிறது.
🔵 சக்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்.
எனவே,
நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்.
🔵 நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அணுப்ப வேண்டும்.
நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை *உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து* கொண்டு அழித்து ஒழிப்போம்.
Whatsapp+94773466837
17/05/2026
Cystitis என்பது மூத்திரப்பை (Urinary Bladder) அழற்சி / infection ஏற்பட்டிருப்பதை குறிக்கும். பொதுவாக இது Urinary Tract Infection (UTI) ஆக இருக்கும்.
👧 குழந்தைக்கு ஏற்படும் அறிகுறிகள்:
• அடிக்கடி மூத்திரம் போக வேண்டும் போல உணர்வு
• மூத்திரம் போகும்போது எரிச்சல் அல்லது வலி
• கீழ் வயிற்றில் வலி
• சில சமயம் காய்ச்சல்
• மூத்திரம் மங்கலாக அல்லது துர்நாற்றம் இருக்கலாம்
⚠️ காரணங்கள்:
• Bacterial infection
• தண்ணீர் குறைவாக குடிப்பது
• மூத்திரத்தை நீண்ட நேரம் அடக்கி வைப்பது
• சுத்தம் சரியாக இல்லாதது
✅ என்ன செய்ய வேண்டும்:
• அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்
• மூத்திரத்தை அடக்கி வைக்காமல் உடனே கழிக்க வேண்டும்
• தனிநபர் தூய்மை (hygiene) கவனிக்க வேண்டும்
*வீட்டிலேயே செய்யக்கூடிய பராமரிப்பு:*
🥤 குடிக்க வேண்டியவை
• அதிகமாக தண்ணீர்
• இளநீர்
• பார்லி நீர் (Barley water)
• எலுமிச்சை நீர்
• மோர்
🍉 சாப்பிட நல்ல உணவுகள்
• தர்பூசணி
• வெள்ளரி
• பப்பாளி
• வாழைப்பழம்
• கீரை வகைகள்
🚫 தவிர்க்க வேண்டியவை
• அதிக காரமான உணவு
• ஜங்க் food / fast food
• அதிக தேநீர், காபி
• எண்ணெய் பொரியல்
🧼 பராமரிப்பு
✔️ மூத்திரத்தை அடக்கி வைக்காமல் உடனே கழிக்க வேண்டும்
✔️ தினசரி சுத்தம் (hygiene) கவனிக்க வேண்டும்
✔️ Cotton உடைகள் அணிவது நல்லது
⚠️ இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை பார்க்கவும்
• காய்ச்சல் அதிகம்
• மூத்திரத்தில் இரத்தம்
• கடுமையான வயிற்று வலி
• 3–4 நாட்களிலும் சரியாகவில்லை
Whatsapp +94773466837
17/05/2026
தொண்டை வலி / தொண்டை கட்டு இருந்தால் செய்யக்கூடிய எளிய வழிகள்:
1️⃣ ஒரு கப் வெந்நீரில் ½ டீஸ்பூன் உப்பு கலந்து தினமும் 2–3 முறை களுக்கவும்.
2️⃣ வெந்நீர், சுக்கு கஷாயம் அல்லது துளசி + இஞ்சி சேர்த்து குடிக்கலாம்.
3️⃣ ஒரு டீஸ்பூன் தேனில் சிறிது இஞ்சி சாறு சேர்த்து தினமும் 2 முறை எடுத்தால் நல்லது.
4️⃣ இரவு நேரத்தில் வெந்நீரோ அல்லது பாலில் சிறிது மஞ்சள் சேர்த்து குடிக்கலாம்.
*தொண்டை வலி உடனே குறைய 5 நாட்டு வைத்தியம்:*
1️⃣ உப்பு வெந்நீர் களுக்குதல்
ஒரு கப் வெந்நீரில் ½ டீஸ்பூன் உப்பு கலந்து தினமும் 2–3 முறை களுக்கினால் தொண்டை வலி விரைவில் குறையும்.
2️⃣ இஞ்சி + தேன்
ஒரு டீஸ்பூன் தேனில் சிறிது இஞ்சி சாறு கலந்து தினமும் 2 முறை எடுத்துக்கொள்ளலாம்.
3️⃣ துளசி கஷாயம்
5–6 துளசி இலை, சிறிது இஞ்சி சேர்த்து காய்ச்சி குடித்தால் தொண்டை கட்டு மற்றும் வலி குறையும்.
4️⃣ மஞ்சள் பால்
ஒரு கப் சூடான பாலில் ¼ டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து இரவில் குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
5️⃣ மிளகு + தேன்
சிறிது மிளகு பொடி தேனில் கலந்து எடுத்தால் தொண்டை வலி மற்றும் இருமல் குறையும்.
❌❌ குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், அதிக எண்ணெய் பொரியல் தவிர்க்கவும்.
Whatsapp +94773466837
17/05/2026
*ஒற்றைதலைவலி* *வராமல் தடுக்க*
எனக்கு ஒரு படத்தை உருவாக்கவும்
சுக்கு, மிளகு, திப்பிலிப் பொடியை மூன்று விரல்களால் எடுத்து, அதைத் தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். அதன் பின், மல்லிப்பொடி ஒரு தேக்கரண்டி, பனை வெல்லம், சுக்குப்பொடியை நீர்விட்டு காய்ச்சிக் குடித்துவரலாம். இது, பெண்களுக்கு உண்டாகும் கர்ப்பப்பை கோளாறுகளையும் சரிப்படுத்தும்.
15 நாட்கள் இரவு படுக்கச் செல்லும் முன், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா சூரணம்) பொடியை தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். இதனால், ரத்தம் சுத்தமாகி, ரத்தஓட்டம் சீராகும். இதனால், ஒற்றைத்தலைவலி மட்டும் அல்ல, வேறு எந்த நோயும் நெருங்காது.
20 மி.லி., தயிரில், அரை லிட்டர் நீர் சேர்த்து, அதில் சிறிதளவு இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, பெருங்காயம், முடிந்தால் சிறிதளவு நெல்லிக்காய் சேர்த்துக் கரைத்து, மோராகப் பருகலாம். இதனால், செரிமானம் சீராகும்; பித்தம் குறையும்; கோடை காலத்தில் இதை எடுத்துக்கொள்வது நல்லது.
Whatsapp+94873466837
17/05/2026
#வாழை_குடிநீர்.
"மருத்துவ பயன்.
வாழை குடிநீர் என்பது வாழை மரத்தின் கிழங்கு தண்டு மற்றும் பகுதியிலிருந்து பெறப்படும் நீராகும்.
வாழை குடிநீரின் சிறப்புகள் மற்றும் மருத்துவக் குணங்களைப் பற்றி விளக்கமாக காண்போம்.
வாழை மரத்தை வெட்டிய பிறகு அதன் கிழங்கு மற்றும் தண்டுகளில் இருந்து ஊறி வரும் நீரே உயிர் காக்கும் மருந்துப் பொருளாக விளங்குகிறது.
அந்த நீரை ஒரு பாத்திரத்தில் சேகரித்து அடுப்பில் வைத்து இளஞ்சூடாக சுடவைத்து சுத்தமான வெள்ளைத் துணியில் வடிகட்டி சுத்தம் செய்து பத்திரப்படுத்தி வருடக் கணக்கில் கெடாமல் பாதுகாப்புடன் நாம் தினமும் பருகினால் உடலில் வெப்பம் சார்ந்து வரும் அனைத்து ஆரோக்கிய குறைபாடுகளில் இருந்தும் குணம் பெறலாம்.
சிறுநீரக கற்களை கரைக்க மட்டுமே பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்நீர் நமது உயிர் ஆற்றலை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது என்பது சிறப்பு.
#வாழைக்கிழங்கு மற்றும் #தண்டு நீரின் நன்மைகள்:
1. சிறுநீரகத்திலிருந்து கற்களை நீக்க உதவுகிறது.
2. சிறுநீரகங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.
3. உடல் வெப்பநிலையை சமப்படுத்த உதவுகிறது.
4. இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
5. நமது நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக அதிகரிக்க உதவுகிறது.
6. கை,கால் குடைச்சல் மற்றும் வீக்கம், முழங்கால் மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது.
7. சிறுநீர் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளை குறைக்கிறது.
8. வாயு பிரச்சினைகளை குறைக்க உதவுகிறது.
9. இது நம் வயிற்றில் இருந்து கழிவுகளை அகற்ற உதவுகிறது.
10. இது கண் பார்வையை மேம்படுத்துகிறது.
11. வயிற்று புண்ணை குணப்படுத்த உதவுகிறது.
12. இது இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை ஒழுங்குபடுத்துகிறது.
13. உடல் வெப்பம் தொடர்பான அனைத்து சுகாதார பிரச்சினைகளையும் நீக்க இது உதவுகிறது.
14. ஆண்மை விருத்தியாகும்.
சர்வ ரோக நிவாரணியாக உள்ள இந்த வாழை கிழங்கு மற்றும் தண்டு குடிநீரை
#பயன்படுத்தும்_முறை*
50 ml வாழைகிழங்கு குடிநீரை தினசரி காலை வெறும் வயிற்றில் உமிழ்நீருடன் உறவாடி ருசித்து அருந்த வேண்டும்.
Whatsapp +94773466837
புதிய வாழ்க்கை பிரபஞ்சத்தின் துணையோடு
22/04/2026
மனம் எங்கே இருக்கிறது...?
"எப்படி இப்படித் தோன்றுகிறது"
"எண்ணங்கள் எங்கிருந்து ஓடி வருகின்றன?"
"இந்த மனமும் ஒரு பெரிய தொல்லைதான்"
"எதுவுமே தோன்றவில்லை என்றால்"
"மனத்தின் சுதந்திரமே மிக முக்கியமானது"
மனத்தைப் பற்றி மனத்திற்கே தோன்றும் விஷயங்கள் முடிவற்றவை, அளவிடற்கரியவை. மனத்தைப் போல் உங்களைச் சாந்தப்படுத்தும், மனத்தைப் போல் உங்களை அழவைக்கும் வேறு எந்த "எண்ணமும்" இந்தப் பிரபஞ்சத்தில் உங்களுக்குச் சந்தித்திருக்காது என்பது நம்பிக்கை.
மனமே நீ, நீயே மனம்.
இயற்கையின் அற்புதமான, பரிபூரணமான படைப்பு மனம். அண்டச் சக்தியை ஒன்றாகக் கலந்து செறிவூட்டிய மூலங்களின் அடையாளமே மனம். பிரபஞ்சத்தின் ஒரு வடிவம் என்றால் அதுவே மனம். அதாவது, நீங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பே.
எண்ணங்கள் ஏழு மகா சமுத்திரங்களின் நீர்மட்டத்திற்கும் மேலே பெருகினாலும், மனம் உருவாவது ஆறு கருவிகளை அடிப்படையாகக் கொண்டே:
1. கண்ணின் உருவக் களத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு மனம் உருவாகிறது
2. காதின் ஒலி அலைவரிசையை அடிப்படையாகக் கொண்டு ஒரு மனம் உருவாகிறது
3. மூக்கின் நாற்றக் களத்தின் வழியாக ஒரு மனம் எழுகிறது
4. நாக்கின் சுவைச் சூழலை அடிப்படையாகக் கொண்டு ஒரு மனம் உருவாகிறது
5. உடலின் ஸ்பரிசத்தின் வழியாக ஒரு மனம் கட்டமைக்கப்படுகிறது
6. எண்ணங்கள் - எண்ணங்களுடன் கலந்து ஒரு மனம் உருவாகிறது
இந்த ஆறு விதமான அறிதல்கள், அடையாளப்படுத்துதல்கள் நிகழ்ந்த உடனேயே, மனம் என்ற "சக்தி" ஜனிதமாகிறது. அந்த ஜனிதமாகும் சக்திக்கு இங்கும் அங்கும் சஞ்சரிக்கும் திறன் உண்டு. சக்தியின் அடிப்படை இயல்பு, அமைப்பிற்குள் பரிமாறப்படும் வேகமே.
ஒரு உருவம் கண்ணுடன் ஸ்பரிசித்து மனம் உருவாகும் செயல்முறை மிகவும் வேகமானது. கண அளவில் வேகமாக உருவாகும் உருவக் களத் திரள்கள் மட்டத்திற்குக் கட்டமைக்கப்பட்ட பின், "ஒரு உருவத்தைப் பார்த்தேன்" என்ற மனம் உருவாகிறது. அந்த மனமே, அந்த உருவம் உருவாகச் செயல்பட்ட வேகமான செயல்முறையின் சக்தியாகும். அந்த உருவான சக்தி சஞ்சரிக்கும் குணம் கொண்டது. அது சக்தியின் தனித்துவமான இயல்பு.
அந்த விதமாக:
· கண் - உருவம் மோதுவதால்
· காது - ஒலி மோதுவதால்
· மூக்கு - நாற்றம் மோதுவதால்
· நாக்கு - சுவை மோதுவதால்
· உடல் - ஸ்பரிசம் மோதுவதால்
· எண்ணங்கள் - எண்ணங்கள் மோதுவதால்
மனம் என்ற சக்தி மூலம் உருவாகிறது. உருவான சக்தி, அச்சக்தியின் இயக்கச் சமநிலையின்படி ஓடுதல் அல்லது சஞ்சரித்தல் நிகழ்கிறது.
இந்தச் சக்தி (மனம்) ஓடும் செயல்முறை செயற்படும்போது, துணைப் பலன்கள் (கருமம்) உருவாகின்றன. அந்தத் துணைப் பலன்களும் செயற்படுவது மூலச் சக்தியிலிருந்து நழுவிய சக்தி மூலத்தின் அடிப்படையிலேயே என்பதால், இந்தச் செயல்முறை ஒரே சக்தி வலையமைப்பேயாகும்.
"நீங்கள்" என்பது அந்தச் சக்தியைத் தாங்கிச் செயற்படும் ஜெனரேட்டர் இயந்திரமாகும். நீங்கள் செய்வது: உருவம், ஒலி, நாற்றம், சுவை, ஸ்பரிசம், எண்ணங்களை அனுபவித்துக்கொண்டு, இந்தப் பிரபஞ்சத்தின் இருப்புக்குத் தேவையான சக்தியை உருவாக்குவதே ஆகும். "நீங்கள்" என்பது இந்த அமைப்பை இயக்கும் ஜெனரேட்டர். "நீங்கள்" என்பது இந்தப் பிரபஞ்சத்தைப் பராமரிக்கத் தேவையான பவர் சப்ளை செய்யும் அடிமைத் தொழிலாளி.
தொடர்புடைய கருவிகள் (கண், காது...) மூலம் மனம் என்ற சக்தி உருவாக்கப்பட்ட பின், அந்தச் சக்தியின் "இயக்கத்தன்மையை"ப் பராமரிக்கத் தேவையான மற்றொரு பொறிமுறையும் அந்தச் செயல்முறையிலேயே உருவாகிறது. அதுவே "கிலேசப் பொறிமுறை" ஆகும். இராகம், துவேஷம், மோஹம் என தம்மத்தில் அழைக்கப்படுவது இந்தச் செயற்பாட்டையே.
ஆறு கருவிகள் மூலம் உருவாக்கப்பட்ட சக்தி இந்தப் பிரபஞ்சத்தின் இருப்புக்கு மிக அவசியமானது. அந்தச் சக்தி உருவான உடனேயே நிருத்தமாகிவிடுவதால், அதைப் பராமரிக்குமாயின், சக்தியின் "இயக்கத்தன்மையை"த் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதனால் உருவம், ஒலி, நாற்றம், சுவை, ஸ்பரிசம் மற்றும் எண்ணங்களின் வழியாக உருவான சக்தியைத் தக்கவைத்துக்கொள்ள இராகம், துவேஷம், மோஹத்தை மூலமாகக் கொண்ட கிலேசப் பொறிமுறையும், தான்ஹா (வேட்கை) ஆகும் செயல்முறையும் செயற்படுகின்றன.
விருப்பம், வெறுப்பு, அன்பு, பாசம், வெறி, கோபம், நல்லது, கெட்டது போன்ற மொழியிலுள்ள சொற்களின் கூட்டத்தால் வரையறுக்கப்படுவது, கருவிகளை அடிப்படையாக்கி உருவான மனம் என்ற சக்தியின் இயக்கத்தன்மையைத் தக்கவைக்கும் முறைமையின் உறுப்புகளைப் பற்றியே.
நீங்கள் இந்த பவர் சப்ளை அமைப்பின் முழு அடிமைத் தொழிலாளி. நீங்கள் இந்தச் சுழற்சியில் கழித்துச் செல்லும் இந்தச் சுழற்சியில், உங்களாலோ அல்லது உங்கள் குடும்பத்தில் யாராலோ இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட முடியாது.
"ஐயோ, என்ன பொய்? நான் அப்படிப்பட்ட மனிதன் இல்லை. எனக்குள்ள அறிவு, பக்குவம், தகுதிகள் உனக்குத் தெரிந்தால்..."
உங்களுக்கு அப்படித் தோன்றியதா...?
சரி...! உங்கள் பேச்சை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், உங்களால் ஒரு உருவத்தையோ, ஒலியையோ, நாற்றத்தையோ, சுவையையோ, ஸ்பரிசத்தையோ உணர்ந்தால், இராகமோ, துவேஷமோ, மோஹமோ, விருப்பமோ, தான்ஹாவோ ஜனிதமாகாது என்று நிரூபிக்க முடிந்தால், உங்களை நம்புகிறேன். இல்லையென்றால், நீங்களும், மனமும் இந்த அமைப்பைப் பரிபோஷிக்கும் அடிமைத் தொழிலாளியே.
"சரி, அப்படியானால் இவையெல்லாம் இறந்தாலே முடிந்துதானே" என்று யாருக்காவது தோன்றலாம். ஆனால் உங்கள் அனுமானம் தவறானது. மரணம் என்பது சக்தி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றப்படுவதேயாகும். இயக்கத்தன்மையைக் காத்துக்கொண்டு, சக்தி சுதந்திரமாக இந்தப் பிரபஞ்சத்தின் இருப்பிற்காகத் தடையின்றி அடிமைத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறது. பிரம்மாவோ, தேவரோ, மனிதரோ, விலங்கோ, பிரேதமோ என்பது பொருட்படுத்தப்படுவதில்லை - சக்தி சஞ்சரிக்கிறது. செயல்முறை ஓடிக்கொண்டிருக்கிறது.
"அப்படியானால் இந்தப் பேச்சுகளால் எங்களுக்கு என்ன பயன்?" என்று வேறொருவருக்குத் தோன்றலாம். நீங்கள் அறியாவிட்டாலும் (அவித்தியை), உங்களுக்குக் காலையில் எழுந்து வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறதல்லவா? வங்கிக் கடன் தவணையைக் கட்ட வேண்டியிருக்கிறதல்லவா? பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டியிருக்கிறதல்லவா? நோய்வாய்ப்பட்டால் மருந்து சாப்பிட வேண்டியிருக்கிறதல்லவா? உடலைப் பராமரிக்க வேண்டியிருக்கிறதல்லவா? இறுதியில் "நான் சாவேன்" என்று பயப்படவும் "வேண்டியிருக்கிறதல்லவா?"
நீங்கள் நினைத்தாலும், இந்தக் காரியங்களை நான் எனக்காக, என் ஆட்களுக்காகத்தான் செய்கிறேன் என்று, நீங்கள் அந்த எல்லாவற்றையும் செய்து இந்தச் செயற்பாட்டை ஓட்டப் பவர் சப்ளை செய்வதையே செய்கிறீர்கள். விருப்பம், தான்ஹாவை மூலமாக்கி நீங்கள் செய்வது கிலேசப் பொறிமுறையைச் செயற்படுத்துவதே. அமைப்பின் அடிமைத் தொழிலாளி.
அப்படியானால் இதிலிருந்து தப்பிக்கவே முடியாதா?
"நத்தி மே சரணம் அஞ்ஞம்
புத்தோ மே சரணம் வரம்
நத்தி மே சரணம் அஞ்ஞம்
தம்மோ மே சரணம் வரம்
நத்தி மே சரணம் அஞ்ஞம்
சங்கோ மே சரணம் வரம்"
இந்த பவத்தை நீக்குவதைத் தவிர வேறு சரணில்லை
இந்த தர்மதாவை அறிந்துகொள்வதைத் தவிர வேறு சரணில்லை
இந்த குணமாக மாறுவதைத் தவிர வேறு சரணில்லை.
அண்டத் தர்மதாவை அறியும்வரை சஞ்சரிப்பது நிற்காது.
ஞானத்தின் மூலமே நிறுத்தம் நிகழும்.
சக்தி எவ்வாறு ஜனனமாவதை நிறுத்தும்? உருவம் உருவாகும் முறைமையை அறிதல் மூலம். உருவம் இப்படித்தான் உருவாகிறது என்று அறியும்போது, விருப்பம் (தான்ஹா) நிருத்தமாகிறது.
அது எப்படி? உருவம் உருவாகும் விதத்தை ததாகதர்கள் போதித்துள்ளார்கள். அதுவே இந்த அண்டத் தர்மதாவாகிய திரிலக்ஷணம் - அனித்தம், துக்கம், அனாத்தம் என்ற இயல்பு. நித்தியம், சுகம், ஆத்துமா என்றே விரும்பியும், வேட்கைப்பட்டும் சஞ்சரிக்கும் இந்தச் சக்தி. அனித்தம், துக்கம், அனாத்த தர்மதாவை ஞானத்தின் மூலம் காணும்போது, விரும்புவதற்கு இடமின்றிப் போகிறது; வேட்கைப்பட இடமின்றிப் போகிறது. கிலேசப் பொறிமுறை அசெயலாகிறது.
உதாரணம்: மாவில் தண்ணீர், ஈஸ்ட் போட்டுப் பிசைந்து, உருண்டையாக மெல்லியதாக்கி, தக்காளி சாஸ், சீஸ், ஹாம், பேக்கன் போட்டு அந்தத் துண்டை அடுப்பில் சுட்டார்கள். அதற்கு "பிஸ்ஸா" என்று பெயரிட்டு உங்களுக்கு உண்ணக் கொடுக்கிறார்கள். பசியைத் தீர்த்துக்கொள்ள நீங்கள் அந்த உணவைச் சாப்பிடுகிறீர்கள். அதற்கு உடன்படுகிறேன்.
ஆனால், நீங்கள் பார்த்தீர்கள் - பிஸ்ஸா என்ற ஒன்று எப்படி உருவாக்கப்பட்டது என்று. போட்ட அந்த மூலப் பொருட்களில் பிஸ்ஸா என்று ஒன்று இல்லை. அந்த மூலப் பொருட்களின் கூட்டுக்குத்தான் பிஸ்ஸா என்று அடையாளப்படுத்தப் பெயரிட்டார்கள். நடந்த இந்தச் செயல்முறையை நிதானமாகப் பார்த்துக்கொண்டிருந்தால் தெளிவாகத் தெரியுமல்லவா - நடந்தது என்ன என்று? இப்போது பிஸ்ஸா என்று விரும்புவது மாவு உருண்டையையா? தக்காளி சாஸையா? சீஸ்ஸையா? ஹாமையா? பேக்கனையா? இவை அனைத்தின் கூட்டுத்தொகைக்குப் பிஸ்ஸா என்று சொன்னாலும், அங்கே உண்மையில் பிஸ்ஸா என்று "தனியாக" ஒன்று இல்லை. அந்த மூலப் பொருட்களின் கூட்டுத்தொகைக்குத்தான் பிஸ்ஸா என்று சொன்னார்கள். ஆனால், செயல்முறை பற்றி அறியாததால், "ஷா! அருமையான பிஸ்ஸா" என்று வேட்கைப்படுகிறார்கள். மீண்டும் சாப்பிடத் தோன்றுகிறது.
சக்தி உற்பத்தியாகிறது. அடிமைத்தனம் செயற்படுகிறது. சஞ்சரிக்க நேரிடுகிறது. துக்கத்தை உருவாக்கித் துக்கப்படுகிறார்கள்.
அறிதலுக்குக் காரணமாகட்டும்!
அனைத்து மனங்களும் நிவேணமாகட்டும
உலகையே உங்கள் பக்கம் இருக்கும் உங்கள் மனம் ஒரு காந்தமே
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
85 Sea Street
Colombo
01100